வந்தவாசி, செப்.10: வந்தவாசி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வந்தவாசி போலீஸ் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் உத்தமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அச்சரப்பாக்கம் சாலை, குளத்துமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காட்டன் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த நெமந்தகார தெருவை சேர்ந்த அனிபா(45), அச்சரப்பாக்கம் சாலையை சேர்ந்த சலாவுதீன்(40) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ₹200 பறிமுதல் செய்தனர்.