அலங்காநல்லூர், ஆக.22: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெற்றதையொட்டி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. மதுரை அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிபெருந்திருவிழா கடந்த வாரம் 17ம் தேதி நிறைவுபெற்றது. இதையொட்டி திருக்கல்யாண மண்டபவளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் 63 லட்சத்து 49 ஆயிரத்து 998ரூபாயும், தங்கம் 54 கிராமும், வெள்ளி 209 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தது. முன்னதாக ஆறாவது படைவீடு சோலைமலைமுருகன் கோயிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் அங்குள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.