பள்ளிப்பட்டு, ஆக. 22:
ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. வட்டாட்சியர் பாண்டியராஜன் வரவேற்றார். அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் 1064 பயனாளிகளுக்கு ₹3.92 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில், எம்.எல்.ஏக்கள் பி.எம்.நரசிம்மன், சிறுணியம் பலராமன், ஆவின் சேர்மன் வேலஞ்சேரி த.சந்திரன், உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.