மதுரை, ஆக. 20: மதுரை சுந்தராஜபுரம் ஜே.ஜே.ரோடு, நகுல் காம்பவுண்டில் வசித்து வந்தவர் தென்னரசு (38). கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 15ம் தேதி, தென்னரசு வீட்டில் மயங்கிவிழுந்ததாக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மருத்துவமனை வந்து விசாரணை நடத்தி, தற்செயல் மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தென்னரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் எஸ்.ஐ. வேம்புலு மற்றும் போலீசார் பல்வேறு ேகாணங்களில் நடத்திய விசாரணையில், தென்னரசுவை அவரது மனைவி விஜயலெட்சுமி, கள்ளக்காதலன் சரவணக்குமார் (24) என்பவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதனையடுத்து இவ்வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.