கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது வக்கீல்கள், பொதுமக்கள் கோரிக்கை

மதுரை, ஆக. 20: மதுரை சுந்தராஜபுரம் ஜே.ஜே.ரோடு, நகுல் காம்பவுண்டில் வசித்து வந்தவர்  தென்னரசு (38). கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 15ம் தேதி, தென்னரசு வீட்டில் மயங்கிவிழுந்ததாக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மருத்துவமனை வந்து விசாரணை நடத்தி, தற்செயல் மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தென்னரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக  அவரது குடும்பத்தினர் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் எஸ்.ஐ. வேம்புலு மற்றும் போலீசார் பல்வேறு ேகாணங்களில் நடத்திய விசாரணையில், தென்னரசுவை அவரது மனைவி விஜயலெட்சுமி,  கள்ளக்காதலன் சரவணக்குமார் (24) என்பவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு  நாடகமாடியது தெரிய வந்தது. இதனையடுத்து இவ்வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.

 போலீசார் கூறுகையில்,  `தென்னரசுவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த சரவணக்குமாருடன், விஜயலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தென்னரசு இதைக் கண்டித்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கணவரை தீர்த்துக்கட்ட, டிரைவர் சரவணக்குமாருடன் சேர்ந்து திட்டமிட்டார். இத்திட்டப்படி, கடந்த 15ம் தேதி இரவு, விஜயலெட்சுமியும்  சரவணக்குமாரும் சேர்ந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தென்னரசுவை, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மஞ்சள் காமாலை பாதிப்பால் இறந்ததாக நாடகமாடினர். தற்போது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்’’ என்றனர்.

Related Stories: