இலுப்பூர், ஆக.20: இலுப்பூர் அருகே இறந்தவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள், கம்பு மற்றும் கட்டையால் தாக்கி கொண்டதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இலுப்பூர் அருகே உள்ள தொட்டியபட்டியை பகுதியை சேர்ந்தவர் சின்னையா மகன் பிரேம்குமார் (26). இவரது பாட்டி ரெங்கம்மாள் நேற்றுமுன்தினம் இறந்து விட்டார். இவரது உடலை இடுகாட்டிற்கு அடக்கம் செய்ய பிரேம்குமார் தரப்பினர் உடலை கொண்டு சென்றனர். அப்போது வழியில் வெடியை வெடித்துக்கொண்டு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளான அருகருகே வீடு உள்ள ஆண்டி மகன் ராசு (55) மற்றும் பெருமாள் மகன செந்தில்குமார் (32) ஆகிய இருவரும் வெடியை இந்த பகுதியில் வெடிக்காதீர்கள் குழந்தைகள் பயத்தில் அழுகிறது. மாடுகள் வெறித்து கயறுகளை அறுத்துக்கொண்டு ஓடுகிறது. அருகில் காய்ந்த வேலிகள் மற்றும் வைக்கோல் போர் உள்ளது. தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என்று கூச்சலிட்டுள்ளனர்.