கரூர், ஆக. 20: அளவுக்கு அதிகமாக சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் நகர பாஜகவினர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து அரசு காலனி செல்லும் வழியில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் தெரு நாய்கள் இந்த பகுதியில் சுற்றி திரிவதோடு, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து பொதுமக்களுக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வருகிறது.