a ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் எஸ்பி பாண்டியராஜன் துவக்கி வைத்தார்

கரூர், ஆக. 20: ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ முகாமை எஸ்பி துவக்கி வைத்தார்.கரூர் மாவட்ட போக்குவரத்து காவல் துறை நடத்திய இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஆட்டோ வேன் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

கரூர் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் ரமேஷ் குழுவினர் பரிசோதனை நடத்தி மருத்துவ ஆலோசனை வழங்கினர். போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வரவேற்றார். சங்கர் நன்றி கூறினார். 100 ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டது.

Related Stories: