திருவள்ளூர், ஆக. 20: ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகமும் மத்திய அரசின் தன்னியக்க தொழில் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து மத்திய அரசின் திறன் மேம்பாட்டு செயலாக்கம் மற்றும் மின் நகர்வு திட்ட குறிக்கோளை அடைய பயிற்சி மற்றும் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை துவக்கி உள்ளனர். இதற்காக எம்.டெக். பவர்ட்ரெயின் இன்ஜினியரிங் மற்றும் மின் ஹைபிரிட் வாகனங்கள் எனும் புதிய படாதிட்டத்தினை துவக்க பூனேவில் இயங்கும் ஏஆர்ஏஐ இன்ஸ்டியூட் மற்றும் வேல்டெக் பல்கலைகழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.