விருத்தாசலம், ஆக. 20: விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் மகள் கங்காகவுரி (19). இவர் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், கங்காகவுரியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.