நாகர்கோவில், ஆக.20: அகில இந்திய முன்னாள் பிஎஸ்எப் வீரர்கள் நல சங்க பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்து மனுவில் கூறியிருப்பதாவது:தக்கலை அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். பென்ஷனை தவிர ேவறு வருமானம் இன்றி வாழ்ந்து வருகிறார். தனது பெண் குழந்தைகளின் நலன் கருதி தனக்கு கிடைக்கும் பென்ஷனில் ஒரு குறிப்பிட்ட தொகையை பள்ளியாடி ரெத்னா சிட் பண்டில் மார்த்தாண்டம், பள்ளியாடி கிளைகளில் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டு கொண்ட 2 சீட்டில் சேர்ந்து மாதம் சீட்டு தொகையாக ரூ.2500 வீதம் கட்டி வந்துள்ளார்.