நாகர்கோவில், ஆக.14: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:குமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் நகரம் தமிழகத்தின் தேன் கிண்ணம் என வர்ணிக்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகளால், தலா a32 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், குமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் தேனீ வளர்ப்போர் உள்ளனர். இவர்களிடம் உள்ள 2 லட்சம் தேனீ குடும்பம் மூலம் ஏறக்குறைய 2 ஆயிரம் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. குமரி மாவட்டத்தில் நியூட்டன் பெட்டியை விடச் சிறிய பெட்டிகளில் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 2017-2018ம் ஆண்டு a58 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் 1,985 விவசாயிகளுக்கு 36,400 தேன் சட்டங்கள் மற்றும் உபகரணகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேனீ வளர்ப்புத்தொழிலை மேம்படுத்தும் வகையில், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பேச்சிப்பாறை, தோட்டக்கலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் a1.50 கோடி மதிப்பீட்டில், தேனீ மகத்துவ மையம் அமையவுள்ளது.