நடிகையிடம் கத்தியை காட்டி கொள்ளை: மும்பை போலீஸ் விசாரணை

மும்பை: பாலிவுட் நடிகையும், மாடலுமான அலங்கரிதா சஹாய் (27) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அலங்க்ருதா சண்டிகர் பகுதியில் வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று பிற்பகல், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரது வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து, நகை மற்றும் ரூ.6.50 லட்சம் ரொக்கத்தை பறித்துக் கொண்டனர். மேலும், அவரது ஏடிஎம் கார்டை பறித்துக் கொண்டனர். தொடர்ந்து நடிகையை, வீட்டின் குளியலறையில் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். சில மணி நேரங்கள் கழித்து, அக்கம்பக்கத்தினர் வந்து அவரை குளியல் அறையில் இருந்து மீட்டனர். கொள்ளை சம்பவம் குறித்து, மும்பை போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். அலங்க்ருதா  சஹாய் ‘நமஸ்தே இங்கிலாந்து’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய  மற்றும் சர்வதேச புத்தகங்களை எழுதியுள்ளார். நடிகை அலங்கரிதாவின் பெற்றோர் டெல்லியில் வசிப்பதால், அவர்கள் தற்போது மும்பை வந்துள்ளனர்….

The post நடிகையிடம் கத்தியை காட்டி கொள்ளை: மும்பை போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: