திருக்கழுக்குன்றம், ஜூலை 19: திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வழுவதூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வழுவதூர் ஊராட்சியில் வழுவதூர், திம்மூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு, கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யவில்லை. இதனால், பல கிமீ தூரம் சென்று, தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தினர். இதையொட்டி கடும் சிரமம் அடைந்தனர். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.