உத்திரமேரூர், ஜூலை 19: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்தில், 2,825 அத்தி மரக்கன்று நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அத்திவரதரை தரித்து செல்கின்றனர். அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், 40 ஆயிரம் அத்திமர கன்றுகளை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.இதையொட்டி, உத்திரமேரூர் ஒன்றியம் தண்டரை, திருப்புலிவனம், காட்டுப்புத்தூர், கட்டியாம்பந்தல், அரசாலிமங்கலம், அகரம் தூளி, கலியபேட்டை, பினாயூர், சித்தாலப்பாக்கம், அயலகாவூர் உள்பட 19 ஊராட்சிகளில் 2,825 மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.