புதுக்கோட்டை , ஜூலை 16: புதுக்கோட்டை நகர காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.புதுக்கோட்டை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உத்தரவின்படி புதுக்கோட்டை நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நகர காவல் நிலைய எஸ்ஐ பூர்விகா தலைமையில் போலீசார் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர். பின்னர் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிபடுவதை தடுத்து உயிர் சேதத்தை தவிர்க்க முடியும்.