ஆண்டிபட்டி, ஜூலை 16: ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோயில் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் குடிநீர் வழங்கி வந்தனர். ஆனால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சினால் ஆழ்துளை கிணறுகள் பழுதானதாலும் கூட்டு குடிநீர் சீராக வராததால் கிராமத்திற்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அக்கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று ஆண்டிபட்டி பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றனர். அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.