சிவகங்கை, ஜூலை 16: சிவகங்கையில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் அரண்மனைவாசல் அருகேயுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், நகர்த்தலைவர் பிரபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பொருளாளர் வெள்ளைச்சாமி மற்றும் கட்சியினர் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் நகர செயலாளர் துரைஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் அயூப்கான், சரவணன், ரமேஸ், புவனேஸ்வரன், காளீஸ்வரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் கருணாகரன் தலைமையில், நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் நகர செயலாளர் அன்புமணி தலைமையில் மாவட்ட துணை செயலாளர் மேப்பல் ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அண்ணாமலை மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.