ராசிபுரம், ஜூன் 27: ராசிபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கப் படுகிறது என வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புதியதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் குடிநீர் குழாய் அமைத்து, குடியிருப்புகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கும் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. அதுபோல் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து, தற்போது வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள், பல்வேறு இடங்களில் நடக்கிறது.