நாமக்கல், ஜூன் 27: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறுவர் பூங்காவை முறையாக பராமரிக்காததால், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மற்றும் அரசுத்துறைகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களும், குறைதீர் கூட்டத்தின் போது, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 இடங்களில் சிறுவர் பூங்காக்கள், பசுமை வனம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களில் புராதன சின்னங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபரகணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள், இந்த பூங்காக்களில் ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.