கோவை, ஜூன்27:கோவையில் 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாயின் கள்ளக்காதலனை ஒரு மாதமாக போலீசார் தேடி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு கோயில் அருகே கடந்த மே மாதம் 27ம் தேதி 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடந்தது. போலீசாரின் விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அதன் தாய் கோவை காரமடையை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்த ரூபினி(22) கொலை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ரூபினியின் கள்ளக்காதலன் கோவை அடுத்த கோவில் பாளையத்தை சேர்ந்த தமிழ் என்பவர் தலைமறைவானார்.