மழை வேண்டி மஞ்சுவிரட்டு நடத்திய மக்கள்

மேலூர், ஜூன் 27:   மேலூர் அருகில் சருகுவலையபட்டியில் உள்ளது ஊதகருப்பன் கோயில். இக்கோயில் திருவிழாவை முன்னிட்டும், மழை வேண்டியும் நேற்று அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.  இதில் மாடு பிடி வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர். சிவகங்கை மாவட்டம் இடையமேலூரை சேர்ந்த சந்திரன்(23) என்பவருக்கு வயிற்றில் காளை குத்தியதில் படுகாயமடைந்தார். இவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். காளை முட்டியதில் மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: