மன்னார்குடி, ஜூன். 27:கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து இறந்தார். வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வேப்பத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் வாசுகி (24). இவருக்கும் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தை சேர்ந்த வேலு (31) விவசாய கூலித் தொழிலாளி என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 17 ம் தேதியன்று வேலு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவியிடை யே தகராறு ஏற்பட்டது. இதில் வேலு தனது மனைவியை தகாத வார்த்தை களால் திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த வாசுகி வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் தீவைத்து கொண்டார். வாசுகியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். நேற்று மதியம் வாசுகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.