அனுமதியின்றி பிளக்ஸ் அமமுக பிரமுகர் மீது வழக்கு ஒருவர் கைதாகி விடுவிப்பு

திருச்சி, ஜூன் 26: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த 23ம் தேதி திருச்சி வந்திருந்தார். ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவரை வரவேற்றும், ஆலோசனை கூட்டம் குறித்தும் கட்சியினர் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். புத்தூர், நடுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ் (20) என்பவர் சங்கம் ஓட்டல் எதிரே போலீஸ் அனுமதியின்றி அமமுக ஆலோசனை கூட்டம் குறித்து பிளக்ஸ்போர்டு வைத்திருந்தார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதே போல பெரிய மிளகுபாறை, அன்பிலார் நுழைவுவாயில் பகுதியில் திருமண வரவேற்பு குறித்து அனுமதியின்றி பிளக்ஸ் வைத்த துலுக்காநத்தம் கோயில் தெருவை சேர்ந்த ஜெயசீலன் (44) என்பவரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories: