பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் மூடியே கிடக்கும் அம்மா குடிநீர் மையம்

பொன்னமராவதி, ஜூன் 26: பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் உள்ள அம்மா தண்ணீர் விற்பனை மையம் மூடியே கிடக்கிறது.தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் குடிநீருக்காக அம்மா குடிநீர் மையம் ஏற்படுத்தப்பட்டு ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சம் காரணமாக அம்மா குடிநீர் மையங்களில் குறைந்த அளவு குடிநீர் பாட்டிகள் அனுப்பப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் படிப்படியாக இப்போது தொடர்ந்து தண்ணீர் பாட்டில் வராமல் பொன்னமராவதியில் உள்ள அம்மா குடிநீர் பாட்டில் வழங்கும் மையம் மூடியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கிக்குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் நலனில் அக்கறை கொண்டு பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: