திருமங்கலம், ஜூன் 25: திருமங்கலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதியதில் சாத்தூரை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள நத்தத்துபட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பரமசிவபாண்டி(20). சாத்தூர் மேட்டுபட்டியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் மகன் மருதுபாண்டி(22). இருவரும் நண்பர்கள். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெறும் டவர் அமைக்கும் பணிக்காக நேற்று முன்தினம் இரவு இருவரும் சாத்தூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு நத்தத்துபட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவரது டிராக்டரில் சென்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது சிவகாசியிலிருந்து மதுரை நோக்கி சென்ற லாரி டிராக்டர் மீது மோதியது.