மதுரை, ஜூன் 25: தமிழகத்தில் மத்திய அரசின் நேருயுவகேந்திராவின் சிறந்த பயிற்சியாளர் விருது மதுரையை சேர்ந்த பயிற்சியாளருக்கு கிடைத்தது.
மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் நேரு யுவகேந்திரா அமைப்பு செயல்படுகிறது. இந்த மையத்தின் மூலம் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு, பெண்கள் நலம், கிராம வளர்ச்சி, தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துதல், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவிகள், பெண்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்களை நேருயுவகேந்திரா நியமித்துள்ளது.