புழல், ஜூன் 25: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்று சோழவரம் ஏரி. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பினால் மதகு வழியாக திறக்கப்படும் உபரிநீர் நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல், பாலகணேசன் நகர், எம்ஜிஆர் நகர், திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரம் வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் சென்று புழல் ஏரியில் கலக்கும். இந்த கால்வாயை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் புதர்மண்டி தூர்ந்துள்ளது. இந்நிலையில், அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுநீர் இந்த நீர் வரத்து கால்வாயில் விடப்படுவதால் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.