வேளச்சேரி, ஜூன் 25: சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர், திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (65). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கிணற்றில் தண்ணீர் பிடிக்கும்போது தவறுதலாக வாளி விழுந்துவிட்டது. இதனை எடுக்கும்படி மகேந்திரனிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து மகேந்திரன், அந்த கிணற்றை எட்டிப் பார்த்தார்.