காஞ்சிபுரம், ஜூன் 25: காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் காவலான்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லிங்கநாதன், பெருமாள், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மோகனன், செயலாளர் நேரு, பொருளாளர் மாரி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தன், நிர்வாகிகள் பாஸ்கர், லாரண்ஸ்,