ராஜபாளையம், ஜூன் 21:ராஜபாளையத்தில் சாலை பணியாளர்கள் அலுவலகம் முன்பாக கையெழுத்து இயக்கம் போராட்டம் நடைபெற்றது. ராஜபாளையத்தில் சாலைப் பணியாளர்கள் கையெழுத்து இயக்கம் போராட்டம் கருமலை மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கருப்பையா, மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் போராட்டத்தை துவக்கி வைத்தனர்.சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 13 ஆண்டு காலமாக வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தை நடத்தி வருகிறோம். இதுவரைக்கும் அரசாங்கமும் சரி, ஆட்சியாளர்களும் சரி, எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்று வதற்கு தயாராக இல்லாத பட்சத்தில் எங்களுடைய போராட்டத்தை இன்று தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்க போராட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.உதவி இயக்குனர் பதவி என்பது பொறியாளருக்கு என்றே நியமனம் செய்யப்படுகிறது. இதனால் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் பதவி இடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாநில மையத்தின் சார்பாக கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெறுகிறது. கையெழுத்து இயக்க படிவத்தை வருகின்ற 29ம் தேதி மாநில நிர்வாகிகள் தமிழகத்தின் முதல்வர், தலைமைச் செயலாளர், உதவி இயக்குனர், முதன்மைச் செயலாளரிடம் கொடுக்க இருக்கிறோம்.