காரைக்குடி, ஜூன் 21: காரைக்குடி கழனிவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே, கடந்த 2017ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டி முடிக்கப்பட்டது. 50 சென்ட் நிலத்தில் முழுவதும் சுற்றுச்சுவர் அமைத்து குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடையாளர்களுக்கான பாதை மற்றும் உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.அப்பகுதியைச் சேர்ந்த பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பாண்டியன் நகர், ஜெய்ஹிந்த் நகர், விஏஓ காலனி, போக்குவரத்து காலனி மற்றும் போலீஸ் காலனி சேர்ந்த பொதுமக்கள் இதை பயன்படுத்துவதற்கு தயாராக இருந்தனர். ஆனால், பல மாதங்களாகியும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி வாலிபர்கள் சிலர் தாங்களே முன்வந்து உடற்பயிற்சிக்கூடம் அமைந்துள்ள பூட்டை உடைத்து மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பூங்காவையும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்த கணபதி கூறுகையில், இப்பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது இதுவரை அரசுத் தரப்பிலோ, மாவட்ட நிர்வாகமோ இப்பூங்காவை திறக்க முன்வரவில்லை. இதுகுறித்து பலமுறை சாக்கோட்டை யூனியன் மற்றும் சங்கராபுரம் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லை.