அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கிலம், இந்தி கற்றுகொள்ள ஆசிரியர் நியமனம்

பொன்னமராவதி, ஜூன் 21: பொன்னமராவதி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுக்கொள்ள ஆசிரியர் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளார். பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம், இந்தி பேசுவதற்கு ஏதுவாக இவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுக்கொடுப்பதற்காக அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்றத்தார்கள் ஆசிரியரை நியமித்தனர்.

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் துணை பொதுமேலாளர் கருப்பையா (கோவை) தன்னார்வ ஆசிரியராக நியமித்தனர். அவரை தலைமையாசிரியர் வெண்ணிலா, அக்னி சிறகுகள் பெரிய சுப்பையா, பள்ளி ஆசிரியைகள், அக்னி சிறகுகள் நிர்வாகிகள் வரவேற்றனர். கருப்பையா ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதோடு பள்ளிப்புரவலராகவும் தன்னை இணைத்துக் கொண்டார்.

Related Stories: