பொன்னமராவதி, ஜூன் 21: பொன்னமராவதி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுக்கொள்ள ஆசிரியர் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளார். பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம், இந்தி பேசுவதற்கு ஏதுவாக இவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுக்கொடுப்பதற்காக அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்றத்தார்கள் ஆசிரியரை நியமித்தனர்.