அறந்தாங்கி அருகே செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா

அறந்தாங்கி, ஜூன் 21: அறந்தாங்கியை அடுத்த செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்கவிழா, நன்கொடையாளர்களுக்கு பாராட்டுவிழா. பள்ளியின் 30ம் ஆண்டு தொடக்கவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ்லிண்ட் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்களை வழங்கிய நன்கொடையாளர்கள் பாராட்டப்பட்டனர்.

மேலும் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கையை ஓராண்டிற்குள் 15ல் 72ஆக உயர்த்திய தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் பாலச்சந்திரன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் கலந்துகொண்டு பேசினார். விழாவில் கிராமத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.

Related Stories: