அறந்தாங்கி, ஜூன் 21: அறந்தாங்கியை அடுத்த செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்கவிழா, நன்கொடையாளர்களுக்கு பாராட்டுவிழா. பள்ளியின் 30ம் ஆண்டு தொடக்கவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ்லிண்ட் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்களை வழங்கிய நன்கொடையாளர்கள் பாராட்டப்பட்டனர்.