அருப்புக்கோட்டை, ஜூன் 19: அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு 3வது நாளாக பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு, வைகை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. வைகை வறண்டு கிடப்பதால், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வழங்கப்படுகிறது. நகருக்கு தினமும் 49.50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில், வறட்சி காரணமாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் மின்தடை, பைப் லைன் பழுது உள்ளிட்ட பால காரணங்களால் மாதம் ஒரு முறை மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நகராட்சிக்குட்பட 9வது வார்டு உச்சிசாமி கோயில் தெருவில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.