தூத்துக்குடி பள்ளிக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

தூத்துக்குடி, ஜூன் 19: தூத்துக்குடி  எம்.பி. கனிமொழி  சார்பில் நோட்டு  புத்தகங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தன்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தனக்கு சால்வை, மாலை  உள்ளிட்டவற்றை தவிர்த்து அவற்றுக்குப் பதிலாக நோட்டு புத்தகம் வழங்குமாறு  வேண்டுகோள் விடுத்தார்.  அதன்படி அவருக்கு அளிக்கப்பட்ட நோட்டு புத்தகங்களை  தூத்துக்குடி மாநகரிலுள்ள பள்ளிகளுக்கு கட்சியினர் மூலம் வழங்கி வருகிறார். அந்தவகையில் தூத்துக்குடி டூவிபுரம் டி.என்.டி.டி.ஏ  நடுநிலைப்பள்ளிக்கு 500 நோட்டு புத்தகங்களை கனிமொழி எம்பி சார்பில் அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் டி.ஏ.ரவீந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை பொன்பாயிடம் வழங்கினார். இதில்  திமுக இளைஞர் அணி முனிராஜ், சதீஸ், வட்ட பிரதிநிதி செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: