இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், போலீசாருக்கு பரிந்துரை செய்தார். வழிப்பறிக்கு முயன்ற 4 பேர் கைது

மதுரை, ஜூன் 18: மதுரையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(47). இவர் அப்பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இரவில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் ஆறுமுகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்து தப்பியோடிய அவர், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துபோது, செல்லூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, பார்த்தசாரதி, ஷாம், பூபதி ராகவேந்திரா ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: