நுகர்வோர் மையம் வலியுறுத்தல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடம்

திருவாரூர், ஜூன் 18: திருவாரூர் கலெக்டர் ஆனந்த வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் இருந்து வரும் இளைஞர் நீதி குழும்பத்தில் காலியாக உள்ள ஒரு உதவியாளர் மற்றும் தகவல் பதிவு இயக்குபவர் பணியிடத்திற்கு மாதம் ரூ 9 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கான கல்வித்தகுதி பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு முதுநிலை தேர்ச்சி மற்றும் கணினி சான்றிதழ் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 24-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் 3வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதே முகவரியில் வரும் 26ம் தேதி காலை 10.30 மணியளவில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளதால் விண்ணப்பதாரர்கள் அனைவரும் அசல் சான்றுகளுடன் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: