நாகர்கோவில், ஜூன் 18: குமரி மாவட்டத்தில் சாரல் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மழை பெய்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து காணப்பட்டது. மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கமும் தணிந்திருந்தது. ‘வாயு’ புயல் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்ததால் தொடர்ந்து மழை பெய்தவண்ணம் இருந்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தி வருகிறது.