சோளிங்கர், ஜூன் 18: சோளிங்கர் அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (50), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை அரியூரிலிருந்து பெரிய வைலாம்பாடிக்கு பைக்கில் சென்றார். பெரிய வைலாம்பாடி ஏரி அருகே சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன்(30) என்பவர் ஓட்டி வந்த பைக்கும் சீனிவாசன் என்பவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.