கோவை,ஜூன்14: தனது மகளின் சாவுக்கு காரணமான இளைஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ளார். கோவைப்புதூர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் கங்காதாரன். இவரது மகள் அஸ்வினி கங்கா, கோவை க.க. சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி தனது வீட்டின் அறையில் அஸ்வினி கங்கா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான இளைஞரை கைது செய்ய வேண்டும் என அப்பெண்ணின் தந்தை கங்காதாரன்நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகள் தற்கொலை செய்து கொண்ட போது அவரது அறையில் உள்ள கடிதம் உள்ளிட்ட சில பொருட்களை குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணைக்காக எடுத்து சென்றனர். மறுநாள் காவல்நிலையத்திற்கு வரசொல்லி கையெழுத்து வாங்கினர்.எனக்கு எழுத படிக்க தெரியாது.