கருங்கல் வெள்ளியாவிளை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புதுக்கடை, ஜூன் 14: கருங்கல் அருகேயுள்ள வெள்ளியாவிளையில் புனித ஆலோசியஸ் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  பள்ளி வளாகத்தில் வைத்து நடந்தது. கடந்த 1998ம் ஆண்டில் அந்த பள்ளியில் 7ம்  வகுப்பு படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் சந்தித்து மகிழ்ச்சியை மட்டுமின்றி பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஆசிர்வாதம் நினைவு  பரிசுகள்  வழங்கினார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியை பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமையில் முன்னாள் மாணவர்கள் வளன் அரசு, சுரேந்திர பிரசாத், ஆன்றோ, வின்சிலின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Related Stories: