புதிய கட்டிடம் கட்டி தரப்படுமா? திருமங்கலம் கப்பலூரில் ஜூன் 15ல் மின்தடை

திருமங்கலம், ஜூன் 13: திருமங்கலம், கப்பலூர் துணை மின்நிலையங்களில் வரும் 15ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருமங்கலம் நகர், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி, கப்பலூர், தியாகராஜர் மில் பகுதிகள், தனக்கன்குளம், உச்சப்பட்டி, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: