நீடாமங்கலம், ஜூன் 13: நீடாமங்கலம் அருகில் பச்சை குளத்திலிருந்து களத்தூர் வரை ஜல்லிகள் பெயர்ந்த மோசமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பச்சை குளம் கிராமத்திலிருந்து வாழாச்சேரி செல்லும் சாலையிலிருந்து பிரிந்து களத்தூர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக கப்பிகள் பெயர்ந்து அவல நிலையில் உள்ளது. இந்த சாலை அமைத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை உரிய அதிகாரிகள் மோசமான சாலையை கண்டு கொள்ளவில்லை.