மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தல் ஜல்லிகள் பெயர்ந்த பச்சைகுளம்- களத்தூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

நீடாமங்கலம், ஜூன் 13: நீடாமங்கலம் அருகில் பச்சை குளத்திலிருந்து களத்தூர் வரை ஜல்லிகள் பெயர்ந்த மோசமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பச்சை குளம் கிராமத்திலிருந்து வாழாச்சேரி செல்லும் சாலையிலிருந்து பிரிந்து களத்தூர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக கப்பிகள் பெயர்ந்து அவல நிலையில் உள்ளது. இந்த சாலை அமைத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை உரிய அதிகாரிகள் மோசமான சாலையை கண்டு கொள்ளவில்லை.

இந்த சாலையில்தான் மேல்கரை கிராமத்தில் சுடுகாடு உள்ளது.பெரும்பாளானோர் கொரடாச்சேரி, திருவாரூர் செல்லவேண்டுமானால் இந்த சாலை வழியாகதான் செல்ல வேண்டும். விவசாயிகள் நடவு நட, உரம் அடிக்க வாகனங்களில் இந்த சாலைவழியாக தான் செல்ல வேண்டும்.இந்த சாலையில் மின்கம்பங்கள் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வழிப்பறி கொள்ளை நடந்ததாக கூறப்படுகிறது. எனவே சம்மநதப்பட்ட அதிகாரிகள் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேளாண் விஞ்ஞானிகள் தகவல்

Related Stories: