கோவை, ஜூன்13: கோவை துடியலூர் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (38). இவரது கணவர் அருண்ஜோ அமல்ராஜ். இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தை உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஆர்த்தி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் சமாதானம் செய்ததால் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அருண்ஜோ அமல்ராஜ் தன் மனைவி மற்றும் குழந்தைகளை ஊட்டிக்கு காரில் சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி சென்னைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்த்தியை அருண்ஜோ அமல்ராஜ் அழைத்துள்ளார்.