மதுரை, ஜூன் 12: போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 1ம் தேதி ெபன்ஷன் வழங்க வேண்டுமென மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாநாட்டில், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மாதத்தின் முதல் தேதியிலேயே பென்ஷன் வழங்க வேண்டும். 44 மாத அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.