ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை அறிவிப்பு

விருதுநகர், ஜூன் 12: விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இயக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் 2019-20 கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. பள்ளி விடுதிகளுக்கு ஜூன்20 வரையும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 4ம் தேதி வரையும் அந்தந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. விடுதிகளில் சேர விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கனை அந்தந்த விடுதிகளில் ஒப்படைக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் இனசுழற்சி மற்றும் விகிதாச்சார அடிப்படையில் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Stories: