பரமத்திவேலூர், ஜூன் 12: பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்காமல் ஊழியர்கள் மராமத்து பணிகளை நேற்று மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. பரமத்திவேலூர் பகுதியில் பெய்த மழையால் கரூர் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் புற்கள் மற்றும் செடிகள் முளைத்துள்ளது. மேலும், சாலையில் மணல் தேங்கி உள்ளது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் நிறுவனத்தின் சார்பில், 10க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.