₹10 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனைதிருச்செங்கோடு, ஜூன் 12: திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ₹10 லட்சத்துக்கு எள் மற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை எள் மற்றும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. ஆத்தூர், சின்னசேலம், கெங்கவல்லி, பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 120 மூட்டை எள் மற்றும் 70 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கொள்முதலுக்காக பவானி. அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, சுமார் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.