குமாரபாளையம் அரசு பள்ளியில் வனம் செய்வோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமாரபாளையம், ஜூன் 12: குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படையின் வனம் செய்வோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயற்கை பாதுகாப்பு இயக்க நிர்வாகி வருண் சுப்ரமணியம் பங்கேற்று, இயற்கையை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டுமென வலியுறுத்தி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா, உதவி தலைமை ஆசிரியர் சாரதா, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் எலிசபெத், வனம் செய்வோம் இயற்கை குழுவின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: