பொன்னமராவதி, ஜூன் 12: பொன்னமராவதி அருகே இரு சமூகத்தினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக 10பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அசம்பாபிதேகங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவலூரைச் சேர்ந்த மகேஷ்வரன் 12ம் வகுப்பு மாணவர். சோமஸ்வரன் 11ம் வகுப்பு மாணவர். காந்த் பாலிடெக்னிக் மாணவர். மூவரும் புதுக்கோட்டையில் இருந்து வந்த பேருந்தில் செவலூர் விளக்கில் இறங்கி அவரவர் ஊருக்கு நடந்து சென்றனர். இதில் காந்த் இருவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக மகேஷ்வரன், சோமஸ்வரன் ஆகியோர் அவர்கள் வீட்டில் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ளவர்களிடம் கூறி இதுகுறித்து விசாரிக்க சென்றனர்.